மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26-ருத்திரன் பாகம் –II

மஹாபெரியவா சரணம்
மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள்-26 ருத்திரன் பாகம் –II
பிரதி திங்கட்கிழமை தோறும்
வாழ்க்கையில் பயம்
மனதில் குழப்பம்
சொந்தங்களின் பகைமை
நட்புகளில் விரோதம்
எல்லோர் வாழ்க்கையிலும்
உள்ளது தானே இவையெல்லாம்
நொடிப்பொழுதில் விலக
மஹாபெரியவாளை சரணடையுங்கள்
நான் ஒரு வாழும் உதாரணம்
இந்த வாரத்தில் இருந்து ருத்திரன் அவர்களின் பிரார்த்தனைகளும் அதற்கு மஹாபெரியவா எப்படி அனுகிரஹித்தார் என்பதை பற்றியும் விலாவரியாக பார்க்கப்போகிறோம். முதல் பிரார்த்தனை : தனக்கு இரண்டு வருட வேலை நீடிப்பு வேண்டும் என்ற பிரார்த்தனை.
வாழ்க்கை என்னும் பந்தயத்தில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்த மறு வினாடியே இறைவன் நீ பந்தயத்தில் ஓட வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. ஓடப்பா ஓடு என்று விதி பிரச்சனைகளை கொடுத்து ருத்திரனை ஒடிக்கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்று வாழ்க்கை சொல்லாமல் சொல்லியது.
இந்த சமயத்தில்தான் இவருடைய நண்பர் ஒருவர் மஹாபெரியவா குரு பூஜையை பற்றி எடுத்துச்சொல்ல பிறகு என்னுடைய தொலை பேசி இலக்கத்தை பெற்று என்னை தொலை பேசியில் அழைத்து தன்னுடைய பிரச்சனைகளை சொல்லி மஹாபெரியவாளிடம் குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி தரச்சொன்னார். நானும் முன்பே சொல்லியபடி மஹாபெரியவாளிடம் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் உத்தரவு வாங்கி ருத்திரன் அவர்களிடம் சொன்னேன்.
ஒரு செவ்வாய் கிழமை காலை எனக்கு ருத்திரன் அவர்களிடம் இருந்து அழைப்பு. அவர் என்னிடம் சொன்னது." மாமா, எனக்கு இப்பொழுது புரிகிறது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
என்னுடைய அலுவலகத்தில் நான் பணியாற்ற வேண்டிய இறுதி நாள். என்னுடைய இருக்கையில் அமர்ந்து காபியை அருந்திக்கொண்டே நாளையில் இருந்து காலையில் மெதுவாக எழுந்திருந்தால் போதும். விமானம் ஏறுவதும் இறங்குவதுமான சப்தம் இனி இல்லை. என்று எனக்குள் சொல்லிக்கொண்டே என்னுடைய அறையை ஆசை தீர ஒரு பார்வை பார்த்து விட்டு என் இல்லத்திற்கு கிளம்பினேன்” என்றார். மேலும் அவர் சொன்னது.
ஆனால் நடந்தது என்ன?. இன்று பாருங்களேன் நான் திரும்ப வேலைக்கு செல்ல வேண்டிய நிலை. எல்லாம் இறைவன் சங்கல்பம். மாமா நான் என் கதையையே பேசிக்கொண்டிருக்கிறேன். மஹாபெரியவா ஏதாவது உத்தரவு கொடுத்தாளா என்று கேட்டார். நானும் ஆமாம் சார் மஹாபெரியவா உங்களுக்கு ஒன்பது வார குரு பூஜைக்கு உத்திரவு கொடுத்திருக்கிறார் என்றேன். ருத்திரனுக்கு ஒரே சந்தோஷம்.
பூஜையை எப்படி செய்வது என்பதை எனக்கு ஈமெயில் மூலம் அனுப்பிடுங்கோ. நான் பக்தியுடன் பூஜையை ஆரம்பித்து நீங்கள் அறிவுறித்தியபடி ஒவ்வொரு வாரம் பூஜை முடிந்ததும் உங்களை தொலை பேசியில் அழைத்து விவரம் சொல்லுகிறேன் என்றர். இனி ஒவ்வொரு வாரமும் ருத்திரன் அவர்கள் பூஜை எப்படி செய்தார். ஒவ்வொரு பூஜைக்கு பிறகு அவருடைய மன நிலை எப்படி இருந்தது.என்பதை இனி பார்ப்போம்.
முதல் வார பூஜை:
இது முதல் வார பூஜை என்பதால் புதன் கிழமை இரவே வேண்டிய சாமான்கள் எல்லாற்றையும் வாங்கி வைத்து கொண்டார்.. எல்லா சாமான்கள் என்றதும் பயந்து விடாதீர்கள்.. மொத்தம் சாமான்களுடைய விலையே நூறு ரூபாய்க்குள் தான் இருக்கும். கொண்டைக்கடலையை இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டார்.
எனக்கு ஒன்று புரிந்தது. அறுபது வயதை எட்டியவர்களுக்கு தான் இறை நம்பிக்கையும் பூஜையின் முக்கியத்துவமும் புரியும் என்பதை நானே கண்கூடாக பார்த்தேன். மிகவும் பயபக்தியுடன் பூஜையை செய்தார். அவருடைய மன நிலை எப்படி இருந்ததாம் தெரியுமா.
இத்தனை நாளும் மருந்தும் நோயுமாக இருந்த வீடு முதல் முறையாக கோவிலாக மாறிக்கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். உங்களுக்கும் மஹாபெரியவாளுக்கும் தான் நன்றி சொல்லணும் என்றார். நானும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். என்று தொலை பேசியை துண்டித்து விட்டு நான் விடை பெற்றேன்.
இரண்டாவது வார பூஜை:
ருத்திரன் அவர்களிடம் இருந்து எனக்கு வந்த தொலை பேசி அழைப்பு. விவரங்கள் இதோ உங்களுக்காக. இந்த வாரம் மஹாபெரியவா பூஜை நன்றாகவே சென்றது. காலையில் ஐந்து மணிக்கே வீட்டில் சுப்ரபாதமும் சோஸ்திரங்களும் ஒளிப்பதால் வீட்டிலுள்ளவர்கள் எல்லோர் மன நிலையிலும் மாற்றம் வந்திருக்கிறது.இதை சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.
மாமா எனக்கு வேலை நீடிப்பு கிடைத்து விடும் அல்லவா? எனக்கு நாள் ஆகஆக ரொம்பவும் பயமா இருக்கு என்றார். நானும் அவரிடம் சொன்னேன் மஹாபெரியவா நினைத்தால் எதுவும் சாத்தியமே.
மஹாபெரியவா உங்களுக்கு நிச்சயம் இரண்டு வருட வேலை நீடிப்பு வாங்கி தருவார் என்றேன். அவரும் ஒரு இரண்டு வருடம் வேலை பார்த்தால் நான் சமாளித்து விடுவேன் என்றார். ருத்திரனின் மன வேதனை எனக்கு நன்றாகவே புரிந்தது.
மூன்றாவது வார பூஜை:
எனக்கு ருத்திரனின் மன வேதனை நன்றாகவே புரிந்தது. என்னால் உணரவும் முடிந்தது. நான் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் மஹாபெரியவளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா என்னுடைய பிரார்த்தனையில் சிலவற்றுக்கு உடனே பதில் கொடுத்து விடுவீர்கள். ஆனால் சிலவற்றிற்கு தாமதமாக பதிலும் கொடுத்து அனுகிரஹமும் செய்கிறீர்கள்.
ஆனால் ருத்திரனின் பிரார்த்தனை சற்றே வித்தியாசமானது பெரியவா. அறுபது வயதில் தன் மகனும் குடும்பமும் தன்னை தாங்கும் என்ற நிலை மாறி இன்று ஓய்வு பெற்ற பிறகும் தன்னுடைய குடும்பத்தையும் மகனையும் தான் தான் தாங்க வேண்டும் என்ற நிலையில் அது எவ்வளவு கொடுமை பெரியவா. உடலிலும் வலு இல்லை மனதிலும் தெம்பு இல்லை.
இந்த கொடுமையான நிலையை மாற்றி நீங்கள்தான் ருத்திரனுக்கு வேலை நீடிப்பு வாங்கித்தரவேண்டும். எனக்காக எதுவும் உங்களிடம் நான் வேண்டி கொள்வதில்லை. மற்றவர்கள் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன்.நீங்கள் நினைத்தால் எதுவும் நொடிப்பொழுது தானே. கொஞ்சம் தயை காட்டுங்கள் பெரியவா என்று என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
ஒரு வினாடி மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா சொன்னார். அவனுக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு. அவனுக்கு நீ கேட்ட மாதிரி இரண்டு வருஷம் வேலை நீட்டிப்பு கிடைக்கும் என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.
நான்காவது வார பூஜை:
நான் மஹாபெரியவா வேலை கிடைத்துவிடும் என்று சொன்னதை ருத்திரனனிடம் சொல்லவில்லை. நம்பிக்கையுடன் பூஜையை செய்யுங்கள். மஹாபெரியவா கருணாசாகரன். உங்களை கை விடமாட்டார் என்று மட்டும் சொன்னேன்.அவரும் பூஜையை நன்றாகவே நம்பிக்கையுடன் செய்தார்.
ஐந்தாவது வார பூஜை:
இந்த வாரமும் பூஜை நன்றாகவே முடிந்தது.ஆனால் ருத்திரன் மனஅளவில் மிகவும் பயந்து போய் இருப்பதை என்னால் உணர முடிந்தது. ருத்திரன் மனதளவில் பாதிக்கப்பட்டு விட கூடாது என்று நினைத்தேன். மஹாபெரியவா சொன்னதை அவரிடம் சொல்லிவிட்டேன்.
"மஹாபெரியவா உங்களுக்கு அனுக்கிரஹம் பண்ணிட்டா. நிச்சயம் வேலை நீடிப்பு கிடைத்துவிடும் என்றேன். பிறகுதான் ருத்திரன் குரலில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் பிறந்தது. நீங்களே சொன்னதற்கு பிறகு எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. ரொம்ப நன்றி மாமா என்று சொல்லி விடை பெற்றார்.
ஆறாவது வார பூஜை:
ருத்திரன் அவர்கள் இந்த வாரம் பூஜையை ஒரு பூரண நம்பிக்கையுடன் முடித்தார். நானும் வேலை விஷயமாக எதாவது தெரிந்ததா என்று கேட்டேன். இதுவரை ஒன்னும் தெரியலை மாமா. காத்திருக்கிறேன் என்று சொன்னார். நானும் மனதை தளரவிட வேண்டாம் என்று சொன்னேன்.
ஏழாவது வார பூஜை:
இந்த வாரமும் நம்பிக்கை இல்லாமல் தான் பூஜையை முடித்தார். நான் அவருக்கு வேண்டிய நம்பிக்கையை கொடுத்தேன்.
எட்டாவது வார பூஜை:
இந்த வராம் பூஜையை செய்து முடித்தார். எனக்கும் தொலை பேசியில் அழைத்து தன்னுடைய கவலையை சொன்னார். நானும் கவலை வேண்டாம் மஹாபெரியவா எல்லாத்தையும் பார்த்துப்பார் என்று சொன்னேன்.அவரும் நம்பிக்கையுடன் சரி மாமா காத்திருக்கிறேன். என்றார்.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிராத்தனையில் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டேன்.
பெரியவா ருத்திரன் மனதளவில் மிகவும் சோர்ந்து போய்ட்டார். அவரால் இனிமேல் தாங்க முடியாது பெரியவா. அவருக்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன். மஹாபெரியவா சொன்னார். சரிடா அவனுக்கு இன்னிக்கு வேலைக்கு உத்தரவு வரும் சந்தோஷம்தானே என்றார். நானும் மஹாபெரியவாளுக்கு நன்றி சொல்லிவிட்டு விடை பெற்றேன்.
காலை பத்து மணிக்கு ருத்திரன் அவர்களை அழைத்து மஹாபெரியவா சொன்னதை அவரிடம் சொன்னேன். இன்னிக்கே உங்களுக்கு ஆர்டர் வந்தாலும் வந்து விடும். ஆர்டர் வந்தவுடன் எனக்கு உடனே சொல்லுங்கள் என்றேன். அவரும் சரி என்றார். அன்று மதியம் வரை நான் தகவலுக்கு காத்திருந்தேன்.
மதியம் எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு. பேசியது ருத்திரன். அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. மிகவும் தெளிவாக பேசினார். ஆனால் அவருக்கு நூறு சதவீதம் சந்தோஷம் இல்லை என்பதை என்னால் உணர முடிந்தது. அவரே தொடர்ந்தார். அவர் எதிர்பார்த்த வேலைக்கான ஆர்டர் சென்னையிலோ பெங்களூரிலிருளோ எதிர்பார்த்தார்.
ஆனால் வந்த ஆர்டர் மும்பை விமான நிலயத்திற்கு.இவருக்கு இரண்டு வருடத்திற்காக மும்பைக்கு குடும்பத்தை மாற்றி வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமமாகும். மாமா எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். மஹாபெரியவாளிடம் சொல்லி எனக்கு சென்னைக்கு ஆர்டர் வரணும். பண்ண முடியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் “நான் விமான நிலைய அதிகாரியாக இருந்தால் செய்து விடுவேன். இருந்தாலும் மஹாபெரியவாளிடம் கேட்டுப்பார்க்கிறேன்.என்றேன்.
மறு நாள் காலை மஹாபெரியவாளிடம் என் பிரார்த்தனையை ருத்திரன் சார்பாக சமர்பித்தேன். இதோ என் பிரார்த்தனை
"பெரியவா ருத்திரனுக்கு நீங்கள் சொன்னமாதிரி வேலைக்கான ஆர்டர் வந்து விட்டது.என்றேன்.
பெரியவா கேட்டார் உனக்கு சந்தோஷமா? நான் இல்லை பெரியவா என்றேன். பெரியவா கேட்கிறார் ஏண்டா நீதானே வேலை வாங்கி தரச்சொன்னே. நான்தான் வாங்கிக்கொடுத்துடனே. இன்னும் என்ன பிரச்சனை?.
நான் மெதுவாக பேச ஆரம்பித்தேன். “பெரியவா ருத்திரனுக்கு சென்னைக்கோ பெங்களூருக்கோ வேலைக்கான ஆர்டர் வந்தால் சௌகரியமாக இருக்கும் என்கிறார். குடும்பத்தை இப்போ மும்பைக்கு மாத்தறது கஷ்டம் என்கிறார்.
கொஞ்சம் சென்னைக்கோ பெங்களூருக்கோ வாங்கிகொடுங்கோ பெரியவா என்றேன் பெரியவா என்னிடம் சொல்கிறார் நன்னா யோசிச்சு சொல்லுடா. அவனை கேட்டுண்டு வேணும்னாலும் சொல்லு என்றார்.
எனக்கு உடனே ஞாபகம் வந்தது. ஒரு முறை ருத்திரன் என்னிடம் சொல்லியிருக்கிறார். சென்னைக்கு ஆர்டர் வந்தா ஒரு பிரச்னையும் இல்லை என்றார். நான் மஹாபெரியவாளிடம் சொன்னேன். பெரியவா அவருக்கு சென்னைக்கே வாங்கி கொடுங்கோ பெரியவா என்றேன்.
பெரியவா சொன்னது சரிடா அவனுக்கு சென்னைக்கே வாங்கிக்கொடுக்கிறேன். உனக்கு சந்தோஷம் தானே. நான் சொன்னேன்.
பெரியவா என் சந்தோஷத்தை விட ருத்திரன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் பெரியவா. மஹாபெரியவா சொல்கிறார் “உனக்குத்தான் மத்தவா சந்தோஷப்பட்டா நீயும் சந்தோஷப்படுவாயே. சரி நீயும் சந்தோஷமா இரு.அவனுக்கு சென்னைக்கே ஆர்டர் வரும்.என்றார். மேலும் சொன்னார் அவனை ஒன்பதாவது வார பூஜையை முடிக்க சொல்லு.என்றார். நானும் சரி பெரியவா என்று விடை பெற்றேன்.
நானும் ருத்திரன் அவர்களை அழைத்து விவரத்தை சொன்னேன்.நீங்கள் ஒன்பதாவது வார பூஜையை முடித்து விடுங்கள்.உங்களுக்கு அதற்கு பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் வேலைக்கான ஆர்டர் வரும். அதுவும் சென்னைக்கே வரும் என்றேன்.அவரும் சரி மாமா என்று சொன்னார்.
ஒன்பதாவது வார பூஜை:
வியாழக்கிழமை காலை ருத்திரன் என்னை அழைத்து பூஜையை நல்ல படியாக முடித்து விட்டதாகவும் தனக்கு ஆர்டர் சென்னைக்கு வந்து விடுமா என்று கேட்டார். நானும் சொன்னேன் நான் மஹாபெரியவாளிடன் உங்கள் கஷ்டங்களை எல்லாம் சொல்லித்தான் பிரார்த்தனை செய்தேன்.
இன்றோ நாளையோ உங்களுக்கு ஆர்டர் வந்து விடும் என்றேன். அவரும் கவலையை மறந்து சந்தோஷமாக பேசினார். நானும் சொல்லிவிட்டேனே தவிர எனக்கும் ஒரே கவலையாக இருந்தது.
வியாழக்கிழமை காலையில் இருந்தே நான் அவருடைய சந்தோஷ செய்தியை தாங்கி வரும் தொலை பேசியை எதிர்பார்த்தேன்.இப்பொழுது ருத்திரன் அவர்களை விட எனக்கு அவருடைய கவலை தொற்றிக்கொண்டது.நானும் மஹாபெரியவாளிடம் செல்வதும் என்னுடைய அறைக்கு வருவதுமாக இருந்தேன்.
எனக்கு தெரிந்த உலகமே மஹாபெரியவாதான்.மதியம் உணவு முடிந்தது. நான் இரண்டரை மணிக்கு எழுந்திருந்து முகம் அலம்பி விஷ்ணு ஸஹஸ்ரநாம பராயணத்திற்கு உட்காரப்போனேன்.தொலை பேசி அழைத்தது. மறு முனையில் ருத்திரன்.
அவருடைய குரலில் ஒரு துள்ளலான சந்தோஷத்தை பார்க்க முடிந்தது.
அவர் என்னிடம் கேட்கிறார். இது என்ன மாமா கலியுகத்தில் இப்படி ஒரு அற்புதமா. நீங்கள் சொல்வது எல்லாம் அப்படியே நடக்கிறது. என்றார். நான் சொன்னேன். அப்படி சொல்லாதீர்கள். மஹாபெரியவா சொல்லுவதை நான் பக்தர்களுக்கு சொல்கிறேன்.நான் மட்டும் சொன்னால் ஒன்றுமே நடக்காது என்றேன்.
இருந்தாலும் மற்றவர்கள் நலனுக்காக இப்படி ஒரு கை ஒரு கால் ஊனத்தோடு ஒரு நாளைக்கு பதினேழு மணிநேரம் உழைக்கிறீர்களே. நீங்கள் ஒரு புனித ஆத்மா. மஹாபெரியவா உங்களை இன்னும் நன்னா வைக்கணும் என்று சொன்னார்.
இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். என் மேலும் என் குடும்பத்தின் மேலும் எப்பொழுதும் ஆசிர்வதிக்கும் கைகள் எத்தனை எத்தனை . இந்த ஆசீர்வாதங்களை விலை கொடுத்து வாங்க முடியுயுமா.
இவை எல்லாமே மஹாபெரியவா எனக்கு கொடுத்த சொத்து. எத்தனை ஜென்மம் உழைத்தாலும் மஹாபெரியவாளுக்கு நன்றி சொல்ல முடியாது. இந்த வகையில் நான் நிச்சயம் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று சொன்னேன்.
ருத்திரன் பழைய மிடுக்குடன் சுறுசுறுப்பாக நிறுவனத்தில் இருந்து வந்த காரில் ஏறிக்கொண்டு தன்னுடைய அலுவலகத்தை நோக்கி பயணப்பட்டார். இன்றும் ருத்திரன் கடைபிடிப்பது காலையிலும் மாலையிலும் மஹாபெரியவா முன் விளக்கேற்றி அமர்ந்து த்யானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படி செய்வதால் மஹாபெரியவா என்னுடனே இருக்கிறார் என்பதை என்னால் உணர முடிகிறது.சில இக்கட்டான சமயங்களில் மஹாபெரியவாளை மனதில் நிறுத்தி த்யானம் செய்தால் வந்த சிக்கல்களும் பிரச்சனைகளும் பறந்து விடுகின்றன என்றார்.இவர் சட்டை பையில் எப்பொழுதும் இரண்டு மஹாபெரியவா படங்களை வைத்திருப்பார்.
யாராவது இவருடைய நண்பர்கள் சிக்கலில் இருந்தால் மஹாபெரியவா படத்தை அவர்களிடம் கொடுத்து த்யானம் செய்ய சொல்வார். மஹாபெரியவாளும் ருத்திரன் அவைகளை கை விடுவதில்லை. இவர் படம் கொடுத்த நண்பருக்கும் மன நிம்மதியையும் சிக்கலில் இருந்து விடுதலையும் மஹாபெரியவா வாங்கிக்கொடுத்து விட்டார்.
வாழ்க்கை
எங்கே தொடங்கும்
எங்கே எவ்விதம் முடியும் என்பதை
யாரும் சொல்ல முடியுமா
வாழ்க்கையின் பாதை தெரிய
இறைவனுக்கு சமமான
குருவை பற்றிகொளவ்து நன்று
இறைவனே குருவாக
உங்களுக்கு கிடைக்கும் பொழுது
இன்னும் என்ன யோசனை
சிக்கென பற்றுங்கள் மஹாபெரியவாளை
தெளிவானபதையில் உங்கள்
வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்